சில நேரங்களில் நாம் வேலை/அவசர காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க முடியாது. இது கவலையளிக்க கூடும் ஆயினும் இவ்வாறான சூழ்நிலைகளில் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க நாம் செய்யக்கூடிய சில விடயங்கள் இங்கே உள்ளன.
தொற்றபாயத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலமும் அங்கு செலவழிக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமும் COVID-19 பற்றிய கவலையை குறைக்க முடியும்.:
- சூப்பர் மார்க்கெட்டுகள் அல்லது பொதுப் போக்குவரத்து போன்ற இடங்களில் நாம் மற்றவர்களுடன் இடைவெளியை பேணுவது கடினம்.
- நண்பர்கள்/உறவினர்களுடன் உணவு/உரையாடலுக்காக உள்ளிடங்களில் சந்திற்கும்போது நாம் நெருக்கமாக இருக்கும்போதும் காற்றோட்டம் குறைந்த/ போதுமானதாக இல்லாதபோதும் மாஸ்க் அணிவதவசியம்.
- காற்றோட்டம் குறைவான இடங்களில் COVID-19 பரவலுக்கான சாத்தியம் அதிகமுள்ளதால் மூடிய மற்றும் ஒடுக்கமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.