COVID-19 பரிசோதனையின் பின் COVID-19 இருப்பதாக உறுதிசெய்யபடுவது பாதிக்கப்பட்ட நபருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் - அவர்களின் உடல்நிலை குறித்து மட்டுமல்லாமல், ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையம் அல்லது மருத்துவமனைக்குச் செல்வது பற்றியும் மிகுந்த கவலையை ஏற்படுத்தும். அவ்வாறு உறுதி செய்யப்பட்ட பின் நடைமுறைகள் மிக வேகமாக மேட்கொள்வதால் சோதனை முடிவுகளைப் பெறுவதற்கு முன்கூட்டியே ஒரு பையை தயார்படுத்தி வைக்க இது உதவும். முன்கூட்டியே தயாராக இருப்பது நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட / மருத்துவமனையில் தங்குவதற்கான செயல்முறையை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் எங்கள் அச்சங்களையும் கவலைகளையும் கையாளவும் உதவுகிறது.